காங். தலைவர் ராகுல் காந்தி 12ம் தேதி தமிழகம் வருகை

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும் 12ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வர உள்ளார். இதற்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த பணியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் நேரில் ஆய்வு செய்தார்.
காங். தலைவர் ராகுல் காந்தி 12ம் தேதி தமிழகம் வருகை
x
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வர உள்ளார். சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் இந்த பிரமாண்ட கூட்டத்தில், சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார். இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணியை இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்