பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி மாத விழாவை முன்னிட்டு நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இங்கு, கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. சக்தி அழைத்தல் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய தலைமைப் பூசாரிகள் குண்டத்தில் முதலாவதாக இறங்கினர்.  இதனையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்