ரூ.228 கோடி மதிப்புள்ள தங்கம்,வெள்ளி பறிமுதல் - சத்ய பிரத சாஹு

தமிழகம் முழுவதும்,தேர்தல் பறக்கும் படை சோதனையில்,113 கோடி ரூபாய் பணம், 228 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்,வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.
ரூ.228 கோடி மதிப்புள்ள தங்கம்,வெள்ளி பறிமுதல் - சத்ய பிரத சாஹு
x
தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 4 ஆயிரத்து 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். தேர்தல் தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க மற்றம் இதர கட்சிகள் சார்பில் 40 மனுக்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 24 மனுக்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரத சாஹு குறிப்பிட்டார். அதிகபட்சமாக தி.மு.க சார்பில் 16 மனுக்களும், அ.தி.மு.க சார்பில் 10 மனுக்களும் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.மாற்று திறனாளிகள் வசதிக்காக, வாக்குச்சாவடிகளில் தலா ஒரு வீல் சேர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட உள்ளதாக கூறிய சத்ய பிரத சாஹு, எல்லா வாக்குபதிவு இயந்திரத்திலும்  பிரைலி வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்