234 மையங்களில் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது
தமிழகம் முழுவதும் 234 மையங்களில் மக்களவைத் தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 234 மையங்களில் மக்களவைத் தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் மூன்றரை லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். எனவே, தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் இவர்கள், முன்கூட்டியே தங்களது வாக்குகளை அளிப்பதற்காக தபால் ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story