இளம் ஜோடியின் காதலை பிரிக்க முயன்ற சிறு மனகசப்பு
தக்க அறிவுரை வழங்கி காதலர்களை இணைத்து வைத்த பெண் ஆய்வாளர்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்த தனியார் பால் பண்ணை தொழிலாளி மாயக் கண்ணனும், அதேபகுதியை சேர்ந்த மீனாவும் காதலித்து வந்த நிலையில், சில மாதத்திற்கு சிறு மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாயக்கண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மீனா, தனது காதலனோடு தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கோரியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய ஆய்வாளர் விஜயலட்சுமி, மாயக்கண்ணனை வரவழைத்து தகுந்த ஆலோசனை வழங்கி, அவரது காதலி மீனாவை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.இதனைத் தொடர்ந்து மாயக்கண்ணன், காவல் நிலைய வளாகத்திலுள்ள விநாயகர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன கையோடு காதலன் மீது அளித்த புகாரையும் திரும்ப பெற்றுக் கொண்ட மீனா, போலீசார், பொதுமக்கள், உறவினர்கள் வாழ்த்துக்களுடன் காவல் நிலையத்தில் இருந்து கணவருடன் புறப்பட்டு சென்றார்.
Next Story