கூர் கத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டிய ரவுடி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சினிமா பாணியில் கூர் கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கூர் கத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டிய ரவுடி
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சினிமா பாணியில் கூர் கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அல்லேரி முனியப்பன் கோயிலில் நேற்று திரண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தமது நண்பனுக்கு இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். கையில் மது பாட்டிலும், நிறைய நகைகளும் அணிந்திருந்த, பிறந்த நாள் கேக் வெட்டிய நபர் மற்றும் கூடியிருந்த நபர்கள் குறித்து எந்த விவரம் தெரியவில்லை. ரவுடி பினு பாணியில், கூரிய ஆயுதத்தால் கேக் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, கேக் வெட்டியவர் சேலம் கிச்சிலிப்பாளையத்தை சேர்ந்த  ஜீசு என்பது தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்