காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வாக்கு சேகரிப்பு

நாகர்கோவில் மக்களவை தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமார் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வாக்கு சேகரிப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மக்களவை தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமார்,  அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு,  திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி, கட்சியினர், உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில்,  தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து அதிகாரிகள் கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் வாகனங்களில் கட்சி கொடிகள் கட்டுவதை தொண்டர்கள், தவிர்த்தனர். மேலும், கொடிகளை கட்டாமல், தொண்டர்கள் சால்வைகளாக அணிந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்