பள்ளி வேன் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு

சகோதரனின் கண்முன் சிறுமி உயிரிழந்த சோகம் : வேன் ஓட்டுனர் மீது சிறுமியின் உறவினர்கள் புகார்
x
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சையது ரஃபிக் ஜக்ரியா. அவரது  6 வயது மகள்  ஆயிஷா சுஹைனா அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தாள். இந்நிலையில்  வழக்கம் போல் சகோதரருடன் சைக்கிளில் பள்ளிக்கு சென்ற ஆயிஷா, வகுப்பறை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள் அப்போது பள்ளி வளாகத்திற்குள் பின்னோக்கி சென்ற பள்ளி வேன்  எதிர்பாரதவிதமாக ஆயிஷா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஆயிஷா உயிரிழந்தாள்.பள்ளி வேன் ஓட்டுனரின் அலட்சியமே, ஆயிஷா உயிரிழப்புக்கு  காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் சகோதரனின் கண் முன்னே ஆயிஷா  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்