நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ
x
சென்னை அருகே பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  பாரிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்  சேவன் என்பவர் தனது காரை பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்திற்குள் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரத்தில், காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த நீதிமன்ற ஊழியர்கள் பூந்தமல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்