ரவீந்திரநாத்தை தோற்கடிக்க நான் போதும் - தங்க தமிழ்ச்செல்வன் கருத்து

ரவீந்திரநாத்தை தோற்கடிக்க நான் போதும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ரவீந்திரநாத்தை தோற்கடிக்க நான் போதும் - தங்க தமிழ்ச்செல்வன் கருத்து
x
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத், தினகரனையே தோற்கடிப்பேன் என்று கூறியதாகவும், ஆனால் அவரை தோற்கடிக்க தினகரன் தேவையில்லை, தானே  போதும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்அவர் பிரசாரம் செய்தார். அப்போது, தங்க தமிழ்ச்செல்வன் பிரசார வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தங்க தமிழ்ச்செல்வன், மற்ற கட்சியினரின் வாகனங்களையும் இது போன்று சோதனை செய்தால் ஜனநாயக முறைப்படி இருக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து மற்ற கட்சியின் வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்