பிரசாரத்தின் போது கத்தியால் குத்த முயற்சி செய்தார்கள் - காங். வேட்பாளர் ஜோதிமணி காவல்நிலையத்தில் புகார்

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை சிலர் கத்தியால் குத்த முயன்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்தின் போது கத்தியால் குத்த முயற்சி செய்தார்கள் - காங். வேட்பாளர் ஜோதிமணி காவல்நிலையத்தில் புகார்
x
கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார். இந்த நிலையில் அரவக்குறிச்சி அருகே லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, இளைஞர்கள் சிலர் கத்தியை காட்டி ஜோதிமணியை மிரட்டியதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர்களை பிடித்த கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், திருமூர்த்தி மற்றும் பெரியசாமி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் பிரசாரத்தில் இருந்த தன் மீதும், தன்னுடன் இருந்தவர்கள் மீதும் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதல் நடந்ததாக ஜோதிமணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்