17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், பாட்டி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், பாட்டி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், பாட்டி உட்பட 5 பேர்  மீது வழக்கு பதிவு
x
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் கண்ணன் இரண்டாம் திருமணம் செய்த நிலையில், மாணவியின் தாய், பாட்டி ஆகியோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஸ்குமார் என்பவருக்கு மாணவியை கடந்த பிப்ரவரி மாதம், அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.இதையடுத்து, தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தாக,  திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்தார். அதன்பேரில், அவரது தாய் மகாலட்சுமி,  பாட்டி , தாத்தா மற்றும் கணவரின் தாய் தமிழ்ச் செல்வி, தந்தை முருகன் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கணவர் சதீஷ்குமார் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்