அம்பேத்கர் சிலையை திருப்பி கேட்டு போராட்டம் - தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மக்கள் எச்சரிக்கை

செங்கத்தில் பறிமுதல் செய்த அம்பேத்கர் சிலையை அதிகாரிகள் தர மறுப்பதால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
அம்பேத்கர் சிலையை திருப்பி கேட்டு போராட்டம் - தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மக்கள் எச்சரிக்கை
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பறிமுதல் செய்த அம்பேத்கர் சிலையை அதிகாரிகள் தர மறுப்பதால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அம்பேத்கரின் வெண்கல சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது அந்த சிலையை அனுமதியின்றி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வைத்திருப்பதாக கூறி சிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சொந்தமாக இடம் வாங்கிய பொதமக்கள், அம்பேத்கர்  சிலையை தரும்மாறு கேட்ட போது, அதனை தர அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனை கண்டித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்