"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல் - திமுக எம்.பி. கனிமொழி
x
பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். இதுவரை சந்தித்த தேர்தல், கட்சிகளுக்கு எதிரான தேர்தல் என்றும், கருத்துச் சுதந்திரத்துக்காக போராட வேண்டிய தேர்தல் இது என்றும் கனிமொழி தெரிவித்தார். வெற்றியை ருசிக்க ஜாதி, மத, மொழி பிரச்சினைகளை தூண்டி, எந்த எல்லைக்கும் எதிர்கட்சிக் கூட்டணியினர் செல்வார்கள் என்று வெளிநாட்டு அறிக்கைகள் கூறுவதாகவும் கனிமொழி எச்சரித்தார். 


Next Story

மேலும் செய்திகள்