ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் : ரூ.12.20 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் கண்ணனின் மனைவிக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், மூன்று குழந்தைகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story