குணா குகை பகுதியில் பதற்றமான சூழல்

வனத்துறையினர் வியாபாரிகள் இடையே கடும் மோதல்
குணா குகை பகுதியில் பதற்றமான சூழல்
x
கொடைக்கானல் குணா குகை பகுதியில் வனத்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள கடைகளில், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்தபோது, மாரி என்ற பெண் நடத்தி வரும் கடையில் ஸ்டவ் பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளனர். அதனை பறிமுதல் செய்ய முயன்றபோது எழுந்த வாக்குவாத‌த்தில் வனத்துறை ஊழியர் ரித்தீஸ் என்பவர் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக கடைக்காரர்கள் வனத்துறை அதிகாரி ரித்தீஸை தாக்கியதால்  அவர் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்