"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
x
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க.  வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அத்திகடவு - அவினாசி திட்டத்திற்கு  ஆயிரத்து 652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக வாக்காளர்கள் இடையே தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாது என்றும், அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்