திருவள்ளூர் காங்.வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்றக்கோரி போராட்டம் : இருவர் தீக்குளிக்க முயற்சி - சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் தொகுதிக்கு புதிய செயல்தலைவர் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மாற்றக்கோரி, அக்கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் காங்.வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்றக்கோரி போராட்டம் : இருவர் தீக்குளிக்க முயற்சி - சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு
x
காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் தொகுதிக்கு புதிய செயல் தலைவர் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மாற்றக்கோரி, அக்கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அவருக்கு பதிலாக எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர், செல்வபெருந்தகையை வேட்பாளராக அறிவிக்கக்கோரி போராட்டம் நடத்தினர். இல்லை என்றால் எஸ்சி எஸ்டி பிரிவினர் அனைவரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். அப்போது, அங்கு மாநில தலைவர் அழகிரியின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலில் பெட்ரோல் ஊற்றி இருவர் தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது. தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்