ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது - இலங்கை கடற்படையினர்  நடவடிக்கை
x
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்த போது எல்லை தாண்டி வந்ததாக கூறி 11 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.இதையடுத்து,அவர்களை காரை நகர் கடற்படை முகாமுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.அங்கு மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 8 தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் நாடு திரும்பிய நிலையில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்