உலக வானிலை தினம் கொண்டாட்டம் - மாணவ, மாணவிகள் வியப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது
உலக வானிலை தினம் கொண்டாட்டம் - மாணவ, மாணவிகள் வியப்பு
x
''சூரியன், பூமி, வானிலை'' என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மைய இயக்குனர் பாலசந்திரன் பங்கேற்றார்.பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.வெப்ப நிலை, மழை காட்சிகள், சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சீர்குலைந்த கஜா புயல் பாதிப்பு போன்றவை புகைப்பட காட்சியாக வைக்கப்பட்டிருந்த‌ன.அதோடு,  காற்றின் வேகத்தை அளக்கும் கருவிகள், வெப்பத்தை அளவிடும் கருவிகள் என பல சாதனங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த‌ன.விழாவில் பேசிய மாணவ மாணவிகள்,குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாராட்டினர்

Next Story

மேலும் செய்திகள்