சிலைக்கடத்தல் வழக்கில் கைதான டி.எஸ்.பி : ஏப்.5 வரை காவல் நீதிமன்றம் உத்தரவு

சிலை திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி காதர் பாட்சா நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
சிலைக்கடத்தல் வழக்கில் கைதான டி.எஸ்.பி : ஏப்.5 வரை  காவல்  நீதிமன்றம் உத்தரவு
x
நெல்லை மாவட்டம் பழவூர் நாரும்புநாதர் கோவிலில் சிலை திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி காதர் பாட்சா நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கோவிலில் இருந்து13 ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்ட நிலையில், அதில் நான்கு சிலைகள் வெளிநாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக  இருந்த காதர் பாட்சாவை, சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையில் கைது செய்த போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், காதர் பாட்சாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனையடுத்து அவர்,   திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்