மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்
x
சேலம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்தீபனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.திருவாரூரில் தொடங்கி இன்று மூன்றாவது நாளாக பிரசாரம் செய்து வருவதாக தெரிவித்த ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தார். தி.மு.க. பிரசார கூட்டங்களுக்கு மக்கள் அதிகஅளவில் வருவதாகவும், இந்த கோட்டை மைதானத்தில் கூடியுள்ள கூட்டம், விரைவில்,சென்னை ஜார்ஜ்  கோட்டையில் தி.மு.க. ஆட்சி அமையப் போவதை கட்டியம் கூறுவதாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும் சேலம் எப்போதுமே தி.மு.க. கோட்டை தான் என்றும் அவர் கூறினார்.நாளுக்கு நாள் தி.மு.க.வை நோக்கி மக்கள் வருவது அதிகரிக்க தொடங்கி உள்ளது, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூட உள்ளதை எடுத்துக் காட்டுவதாக உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்