விஏஓக்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஓய்வு பெற்ற ஆயிரம் விஏஓக்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
x
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 896 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்தல் பணிகளில் அதிக அளவில் விஏஓக்களை நியமிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஓய்வு பெற்ற ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு தொகுப்பூதியமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டோ அல்லது டிஎன்பிஎஸ்சி புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளும் வரை தற்காலிக விஏஓக்கள் பணியில் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்