கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த‌தை கண்டு, வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட கணவர், கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்
கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்
x
திருப்பூர் கல்லூரி சாலை வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் தொழிலாளி ரஜினி.இவரின் மனைவி செல்வி பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த தம்பதியின் வீட்டருகே வசித்த வீரமணி என்பவரும் செல்வியுடன் பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார்.அதில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம்,நாளடைவில் கள்ளக்காத‌லாக மாறியுள்ளது.இதனால் விரக்தியடைந்த ரஜினி, கடந்த சில மாதங்களுக்கு முன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்துள்ளார். ஆனால் இதனை சற்றும் பொருட்படுத்தாத‌ செல்வி, தனது கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில்,செல்வி, வீரமணியுடன் தனிமையில் இருந்தபோது, திடீரென ரஜினி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது எழுந்த வாக்குவாத‌த்தில் கள்ளக்காதலன் வீர‌மணி, ரஜினியின் மார்பு பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.ரஜினி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள்  கூறிய நிலையில்,மனைவி செல்வி, ரஜினியுடன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.இதையடுத்து ரஜினியின் உறவினர்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்