பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்

11 மாதங்களுக்கு பிறகு திறக்கும் சிறை கதவு
பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்
x
மாணவிகளை தவறாக வழிகாட்டியதாக பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மார்ச் 12ம் தேதியன்று அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் வழங்கியது. இதையடுத்து, அவரது சகோதரர் ரவியும், குடும்ப நண்பர் மாயாண்டியும் தலா 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, நிர்மலா தேவி, இன்று  ஜாமீனில் விடுதலையாகிறார். இந்த தகவலை அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். சிறையில் இருந்து வரும் நிர்மலா தேவி, எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் எனவும் செய்தியாளர்களை சந்திக்க கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்