வங்கியில், போலி நகைகளை வைத்து ரூ.36 லட்சம் மோசடி : நகை மதிப்பீட்டாளர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.36 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.
வங்கியில், போலி நகைகளை வைத்து ரூ.36 லட்சம் மோசடி : நகை மதிப்பீட்டாளர் கைது
x
லாடனேந்தல் கிராம கனரா வங்கியில் பணிபுரிந்து வரும் செந்தில் குமார் என்பவர் கடந்த இரு ஆண்டுகளாக 2 ஆயிரத்து 77 கிராம் போலி நகைகளை வைத்து சுமார் 36 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் பவுன்ராஜ் சிவகங்கை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட வங்கியில் சோதனை செய்த மற்றொரு வங்கி நகை மதிப்பீட்டாளர் கதிரேசன் என்பவர் போலி நகைகள் குறித்து மேலாளருக்கு தகவல் அளிக்காததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்