வருகிற 21 ந்தேதி முதல் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் - மத்திய அரசு ஒப்புதல்

புதிய வழிமுறை அடிப்படையில் பசுமை பட்டாசுகளை வரும் 21 ம் தேதி முதல் தயாரிக்க பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வருகிற 21 ந்தேதி முதல் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் - மத்திய அரசு ஒப்புதல்
x
டெல்லியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் மேம்பாட்டு துறை மற்றும் வெடி பொருள் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய வழிமுறை அடிப்படையில் வரும் மார்ச் 21-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, மார்ச் 30 ஆம் தேதி, பெரும் அளவிலான வர்த்தக ரீதியிலான பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக நீடித்துவந்த பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தி தொழிலில் நீடித்து வந்த, சிக்கல் அகலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்