பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கம்பத்தடி மண்டபத்தில் முருகப் பெருமான், தெய்வானையுடன் தங்கம் மற்றும் வைரம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினார். வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, தீப ஆராதனைகளுடன் கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து 15 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த திருவிழாவில், நாள்தோறும் முருகப்பொருமான் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சித்தர இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்