ராமர் கோயில் கட்ட மத்தியஸ்தம் தேவையில்லை - ராமானுஜ ஜீயர்

ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று ஸ்ரீவில்லிப்புத்தூரில் ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்
ராமர் கோயில் கட்ட மத்தியஸ்தம் தேவையில்லை - ராமானுஜ ஜீயர்
x
இந்து மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்றும் அதற்கு மத்தியஸ்தம் தேவையில்லை என்று ஸ்ரீவில்லிப்புத்தூரில் ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்கியது போல,ராமர் கோயில் பிரச்சனைக்கும் விரைந்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும் வேறு எந்த கோவிலும் கட்ட கூடாது என பாபரின் வாரிசு கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஓரிரு மாதங்களில், வில்லிப்புத்தூரில் தொடங்கி அயோத்தி வரை, இது தொடர்பான விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்ள உள்ளதாவும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்