வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்

அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்
x
கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு வளாகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில்  4 வயது  சிறுவனின்  செயலால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சுண்ணாம்புகுளத்தில் 3 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் 6 மணிக்கு விடப்பட்டது. இதனையடுத்து வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த வருண் என்ற வீட்டிற்கு சென்று தனது தாயாரை அழைத்துள்ளான். அப்போது பூட்டப்பட்ட கதவை திறந்து வெளியே வந்த மணிமேகலை, அருகே உள்ள ஜவகர் என்பவரின் வீட்டின் வாசலில் சமையல் கியாஸ் சிலிண்டர் தீ  பிடித்து எரிவதை கண்டு திடுக்கிட்டார். இதனையடுத்து  அந்த வளாகத்தில் இருந்த அனைவரையும் அவர் உஷார்படுத்தினார். பின்னர் அருகே உள்ள மற்றொரு குடியிருப்பு வளாகத்திற்கு மேல் மாடி வழியே அவர்கள் இடம் மாறி சென்றனர். பின்னர் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது.

Next Story

மேலும் செய்திகள்