கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான்
மானை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
வந்தவாசி அருகே, விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த காவேரிப்பாக்கம் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான 30 அடி ஆழ கிணற்றில் ஒரு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று விழுந்தது.இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்,அந்த புள்ளி மானை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்
Next Story