மெட்ரோ ரயில் பணிக்கான இரும்பு கம்பி திருட்டு

60 கிலோ இரும்பு கம்பியுடன் ஆட்டோ ஓட்டுனர் கைது
மெட்ரோ ரயில் பணிக்கான இரும்பு கம்பி திருட்டு
x
சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த இரும்புக் கம்பியை திருடிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவொற்றியூர் முதல்  விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பணிகளுக்கான இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.நேற்று நள்ளிரவு 60 கிலோ எடையுள்ள இரும்பு பொருளை,ஆட்டோவில் ஒருவர் ஏற்றிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து,எண்ணூர் விரைவுச்சாலையில் பழைய பேப்பர் மற்றும் இரும்பு கடை அருகே ஆட்டோ நிற்பதை போலீசார் பார்த்தனர்.அப்போது தப்பி ஓட முயன்ற ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்