தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு : 1 ஐஜி, 2 எஸ்.பி., 40 அதிகாரிகளுடன் கட்டுப்பாட்டு அறை

மாநில காவல்துறை சார்பில் சென்னையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு : 1 ஐஜி, 2 எஸ்.பி., 40 அதிகாரிகளுடன் கட்டுப்பாட்டு அறை
x
மாநில காவல்துறை சார்பில் சென்னையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அப்போதே தேர்தல் நடைமுறை அமலுக்கு வருவதாக கூறினார். இதைத் தொடர்ந்து தேர்தல் விதிமீறல் புகார்களை பெற, தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் கட்டுப்பாட்டு தலைமை அதிகாரியாக ஐஜி சேஷசாயி நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு எஸ்.பி., 40 அதிகாரிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறையில், தேர்தல் விதி மீறல், வேட்பாளர் மீதான புகார்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்