முப்பெரும் விழா கொண்டாடிய தொடக்கப் பள்ளி : பள்ளிக்கு சீர்வரிசையுடன் அணிவகுத்த பழைய மாணவர்கள்

சிவகங்கை அருகே உள்ள பழையூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பழைய மாணவர்கள் சீர்வரிசையுடன் அணிவகுத்தனர்.
முப்பெரும் விழா கொண்டாடிய தொடக்கப் பள்ளி : பள்ளிக்கு சீர்வரிசையுடன் அணிவகுத்த பழைய மாணவர்கள்
x
சிவகங்கை அருகே உள்ள பழையூர்  கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பழைய மாணவர்கள் சீர்வரிசையுடன் அணிவகுத்தனர். இந்த பள்ளியில் இன்று, கல்வி சீர்வரிசை திருவிழா, மகளிர் தின விழா, மற்றும் விளையாட்டு திரு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் பழைய மாணவர்கள் ஒன்றுசேர்ந்து பீரோ, விளையாட்டு பொருட்கள், பாத்திரங்கள் என சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சீர் வரிசையாக வழங்கினர். இதில் பனையூர் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்