40 தொகுதி வெற்றியை குறிக்கும் வகையில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம்

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்பதை சுட்டிக்காட்டும் விதமாக கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
40 தொகுதி வெற்றியை குறிக்கும் வகையில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம்
x
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்பதை சுட்டிக்காட்டும் விதமாக கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 20 தொகுதிகளில் களம் காண்கிறது. இந்நிலையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை குறிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில்  உள்ள கருணாநிதி நினைவிடத்தில் 40க்கு 40 என  மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 11ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்