கோடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு : மனோஜ், சயானுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து
உத்தரவை எதிர்த்து இருவரும் மனு தாக்கல். தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய மனோஜ் மற்றும் சயானுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி காவல்துறை சார்பில் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 8 ந்தேதி மனோஜ் மற்றும் சயானுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்தனர். இது தொடர்பான விசாரணையின் போது மனோஜ் மற்றும் சயான் மீது பல வழக்குகள் கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் ,அவற்றை நீர்த்து போக செய்ய இருவரும் முயற்சிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையடுத்து சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story