அம்மா சமுதாய வானொலி சேவை : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னையில் அம்மா சமுதாய வானொலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், வானொலி தொடக்க விழா நடந்தது. இந்தியாவிலேயே முதன்முறையாக கைபேசி மூலம் நவீன தொழில் நுட்பத்தில் அம்மா சமுதாய வானொலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், நடப்பாண்டுக்கான புதிய ஜவுளி கொள்கையை, முதலமைச்சர் வெளியிட கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெற்றுக் கொண்டார். மேலும், சுகாதாரத்துறை சார்பில், அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார்.
Next Story