"அறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" - தேர்வுத் துறையின் உத்தரவால் ஆசியர்கள் இடையே பரபரப்பு

பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு பள்ளி மாணவர் உள்பட 3 மாணவர்கள் இதுவரை பிடிபட்டுள்ளனர்.
அறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் - தேர்வுத் துறையின் உத்தரவால் ஆசியர்கள் இடையே பரபரப்பு
x
பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு பள்ளி மாணவர் உள்பட 3 மாணவர்கள் இதுவரை பிடிபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வுத் துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அதில், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களை பறக்கும் படையினர் கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், 3 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய உத்தரவுபடி 3 மாணவர்கள் மற்றம் தேர்வறை பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுத் துறை எடுத்துள்ள இந்த  நடவடிக்கை தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்