ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்கள் : தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் வேட்பாளர்களை தமிழ் விவசாயிகள் சங்கம் நிறுத்தியுள்ளது.
ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்கள் : தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
x
வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் வேட்பாளர்களை தமிழ் விவசாயிகள் சங்கம் நிறுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற தொகுதிகளான தூத்துக்குடிக்கு சுந்தர்ராஜ் என்பவரையும் ,விருதுநகருக்கு செல்வராஜ் என்பவரும், சட்டமன்ற தொகுதிகளில் விளாத்திகுளத்தில் நடராஜன் என்பவரும், ஓட்டப்பிடாரத்தில் சாமியா என்பவரும்,  சாத்தூரில் வெங்கட சுப்புராஜ் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மத்திய மாநில அரசுகள் அனைத்து வகைகளிலும் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டிய அந்த அமைப்பின் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி, விவசாயிகளின் ஓட்டு விவசாயிக்கே செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலேயே, வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்