பட்டாசு ஆலையில் தீ விபத்து

நெல்லையில் பட்டாசு விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்
பட்டாசு ஆலையில் தீ விபத்து
x
நெல்லை மாவட்டம் , வரகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில், வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விதிகளை மீறி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகாசியை சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதனி​டையே, உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளா​ர். விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்வதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்