கோவையில் 5.75 கிலோ நகை கொள்ளை போன விவகாரம் : பார்சல் சர்வீஸ் அலுவலக பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது

கோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் 5.75 கிலோ நகை கொள்ளை போன விவகாரம் : பார்சல் சர்வீஸ் அலுவலக பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது
x
கோவை பீளமேடு, அவினாசி சாலையில் கடந்த 7 ம் தேதி காலை பார்சல் சர்வீஸ் ஊழியர் பிர​தீப் சிங் என்பவரிடம் இருந்து, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற் றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இன்று அந்த பார்சல் நிறுவனத்தின் பெண் ஊழியர், அவரது கணவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த  சி.சி.டி.வி. பதிவுகள், விசாரணைக்கு பெரிதும் உதவாத காரணத்தினால் சற்று தொய்வு ஏற்பட்டதாக அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்