நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
x
சென்னையில் இருந்த படி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கூறுகையில், ஓசூர் தொகுதி வெற்றிடமாக உள்ளது என தலைமை  தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள  வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பாளர்கள் 400 பேருக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடை பெற உள்ளதாகவும் கூறினார். இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை செய்து  கொள்ளலாம் என தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள வாக்காளர் செயலியை மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்