பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்து ரயிலை கவிழ்க்க சதியா?

சென்னையை அடுத்த தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம் அருகே நேற்று இரவு தண்டவாளத்தில் பெரிய கல் கிடந்துள்ளது.
பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்து ரயிலை கவிழ்க்க சதியா?
x
சென்னையை அடுத்த தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம் அருகே நேற்று இரவு தண்டவாளத்தில் பெரிய கல் கிடந்துள்ளது. அதன் மீது அரக்கோணத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதியதில் அந்த கல் உடைந்து சிதறியது . இந்த சம்பவத்தில் ரயில் என்ஜின் சேதமடைந்த நிலையில்,  இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்