கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது.
வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பைன் மரக்காடு,மோயர் பாயிண்ட், குணா குகை, தூண்பாறை , பசுமை பள்ளத்தாக்கு போன்ற இடங்களில், மேகக் கூட்டங்கள் கலைந்து வந்து சுற்றுலா பயணிகளை வருடியது. லேசான வெயிலுடன் கூடிய இதமான கால நிலை நிலவுவதால், குதிரை சவாரி, சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story