பணியில் சேர்ந்த தினமே துயரச் சம்பவம் - வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் பற்றிய உருக்கமான தகவல்கள்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன்.
பணியில் சேர்ந்த தினமே துயரச் சம்பவம் - வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் பற்றிய உருக்கமான தகவல்கள்
x
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்தார்.
காஷ்மீரில் பணியாற்றி வந்த அவருக்கு, திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. சுப்பிரமணியன்-கிருஷ்ணவேணி தம்பதிக்கு இன்னும் குழந்தையில்லை. பொங்கல் கொண்டாட சொந்த ஊர் வந்த சுப்பிரமணியன், கடந்த 10ஆம் தேதி மீண்டும் காஷ்மீர் புறப்பட்டார். பணியில் சேர்ந்துவிட்டதாக மனைவி கிருஷ்ணவேணியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ஆனால் அன்றைய தினமே, தற்கொலை படை தாக்குதலில் சுப்பிரமணியன் இறந்த செய்தி அந்த குடும்பத்தினருக்கு பேரிடியாய் விழுந்துள்ளது. இறப்பு செய்தி கேட்டு, வீரர் சுப்பிரமணியன் இல்லத்தில் குவிந்த உறவினர்கள், அவரது பெற்றோர், மனைவிக்கு ஆறுதல் கூறி தேற்றுகின்றனர். ராணுவவீரரின் மறைவால், சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்