உணவில் பேண்டேஜ் கிடந்த விவகாரம் : மன்னிப்பு கோரியது ஸ்விக்கி நிறுவனம்

ஸ்விக்கி செயலி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கறைபடிந்த பேண்டேஜ் கிடந்த விவகாரத்தில் ஸ்விக்கி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
உணவில் பேண்டேஜ் கிடந்த விவகாரம் : மன்னிப்பு கோரியது ஸ்விக்கி நிறுவனம்
x
சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் தீனதயாளன் என்பவர் ஆர்டர் செய்த உணவில் கறைபடிந்த பேண்டேஜ் கிடந்த விவகாரம் வெளியாகி அந்த  நிறுவனத்தின் மேல் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நடைபெற்ற  சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளதுடன் தங்களது சேவை பட்டியலில் இருந்து குறிப்பிட்ட உணவு நிறுவனத்தை நீக்குவதாகவும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் ஸ்விக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்