நள்ளிரவில் டாக்சி ஓட்டுனர்கள் சாலை மறியல் - போலீஸ் தாக்கியதாக குற்றச்சாட்டு

போலீசார் தாக்கியதாக டாக்சி ஓட்டுநர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.
நள்ளிரவில் டாக்சி ஓட்டுனர்கள் சாலை மறியல் - போலீஸ் தாக்கியதாக குற்றச்சாட்டு
x
சென்னை வேளச்சேரி மேம்பாலம் அருகில் ரஞ்சித் என்பவர் ஓட்டிச்சென்ற கார், மஹாவீர் என்ற காவலர் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது இடிப்பது போல சென்றுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில்  காவலர் மஹாவீர் , டாக்சி ஓட்டுனர் ரஞ்சித்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுனர்கள் பள்ளிக்கரனை - வேளச்சேரி சாலையில் காவலரை கண்டித்து நள்ளிரவு 1மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இறுதியில், காவலர் மஹாவீர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்