மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை என கூறி மோசடி
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை எனக் கூறி அதிகாரிகள் போல் பேசி பண மோசடி செய்த கும்பல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வியாசர்பாடியை சேர்ந்த நிஜாம் மொய்தீன், அவரது சகோதரர் ஆகிய இருவரிடமும் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய மர்ம குமபல், 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story