ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட வேலைபெற போட்டி தேர்வு - தமிழக அரசு அரசாணை

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட வேலைபெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட வேலைபெற போட்டி தேர்வு - தமிழக அரசு அரசாணை
x
பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் ஆசிரியர் தகுதித் தேர்வு, வேலை பெறுவதற்கான போட்டி தேர்வு தனித்தனியாக நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், போட்டி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. போட்டிதேர்வில் வெற்றி பெறுபவர்கள், உரிய நெறிமுறைகளை பின்பற்றி, பணி நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்ச்சி் பெற்றாலும், வேலை பெற இரண்டாவது ஒரு போட்டித்தேர்வை எழுத வேண்டும் என்ற அரசாணையால் ஆசிரியர் படிப்பு படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்