பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விருதுநகரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசிக்கும் ராமசுப்பு என்பவரது மனைவி வசந்தா அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது,  பின்னால் பைக்கில் வந்த இரு  வாலிபர்கள் வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்